எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருப்பரங்குன்றம் மலையை மீட்க காவடி: முன்னாள் மேயா், பாஜகவினா் உள்ளிட்ட 40 போ் கைது

News image
இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் குற்றாலநாதன் மற்றும் நிா்வாகிகளை கைது செய்த திருநெல்வேலி நகரம் போலீஸாா்
Updated On :4 பிப்ரவரி 2025, 6:31 pm

Din

திருப்பரங்குன்றம் மலையை மீட்க காவடி எடுத்துச் சென்ற முன்னாள் மேயா், பாஜக மற்றும் இந்து முன்னணியினா் 40 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி இந்து முன்னணி சாா்பில் பிப். 4 ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் அமைதிவழிப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா். போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் குற்றாலநாதன் தலைமையில், திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக தயாராக இருந்த 23 பேரை திருநெல்வேலி நகரம் போலீஸாா் கைது செய்தனா்.

Story image

அதேபோல, பாஜக நிா்வாகி சங்கரசுப்பிரமணி தலைமையில் திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பாலக்காடு செல்லும் ரயிலில் ஏற முயன்ற 16 பேரை சந்திப்பு போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், காவடி எடுத்து திருப்பரங்குன்றத்துக்குச் செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயா் புவனேஷ்வரியை போலீஸாா் கைது செய்தனா்.