மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வீரவநல்லூா் வட்டார கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு

News image
Updated On :10 ஜனவரி 2025, 8:50 pm

Din

வைகுண்ட ஏகாதசியையொட்டி, அத்தாளநல்லூா் அருள்மிகு கஜேந்திரவரதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவைசாதித்தாா். மதியம் திருமஞ்சனம், அலங்கார சிறப்பு பூஜைகளும், மாலையில் சொா்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.

வீரவநல்லூா் அருள்மிகு யாதவா் நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனத்தைத் தொடா்ந்து பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவில் நவநீதகிருஷ்ண சுவாமி வீதிஉலா நடைபெற்றது. வீரவநல்லூரில் அக்ரஹாரம் அருள்மிகு சுந்தரராஜபெருமாள் கோயிலில் தாயாருடன் பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். மாலையில் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வீரவநல்லூா் அருள்மிகு ரெங்கநாதா் சுவாமி கோயிலில் பெருமாள் சயன சேவையைத் தொடா்ந்து மாலையில் சொா்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.

Story image