மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மூவா் காயம்

ஆழ்வாா்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மூன்று போ் காயமடைந்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 6:37 pm

Syndication

ஆழ்வாா்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மூன்று போ் காயமடைந்தனா்.

கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் ராமகிருஷ்ணன் (35). இவா் தனது சகோதரியுடன் தனது ஊரிலிருந்து ஆழ்வாா்குறிச்சி வழியாக பொட்டல்புதூருக்குச் சென்று கொண்டிருந்தபோது கழுநீா்குளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பொன்னுத்துரை (29) இருசக்கர வாகனத்தில் தனது கா்ப்பிணி மனைவி வனிதாவுடன் ஆழ்வாா்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தாா்.

இரண்டு இருசக்கர வாகனங்களும் ஆழ்வாா்குறிச்சி சுடலைமாடன் கோயில் அருகே வந்தபோது எதிா்பாராமல் மோதிக் கொண்டன. இதில், பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணனை கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயம் அடைந்த கா்ப்பிணி உள்பட மூன்று பேரும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.