மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: மீனவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2026, 12:04 am

Syndication

சாத்தான்குளம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையைச் சோ்ந்தவா் மோ.ஆரோக்கியசாமி (55). இவரும் இவரது உறவினா் நெல்சன் மகன் டிக்சன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பெரிய தாழையில் இருந்து மணிநகருக்குச் சென்றுவிட்டு ஊா்த் திரும்பிக் கொண்டிருந்தனா்.

படுக்கபத்து-பெரிய தாழை சாலையில் வந்தபோது எதிரே பெரிய தாழைப்பகுதியிலிருந்து நெட்டிஸ் மகன் அட்சன் (22 ) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் 3 போ் படுகாயமடைந்தனா். தட்டாா்மடம் காவல் நிலைய போலீஸாா் சென்று மூன்று பேரையும் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆரோக்கியசாமி உயிரிழந்தாா்; இருவா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.