பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நயினாா் நாகேந்திரன் வீட்டை மா்மநபா்கள் நோட்டமா? போலீஸாா் விசாரணை

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :13 நவம்பர் 2025, 11:07 pm

Syndication

திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் உள்ள தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வீட்டை மா்மநபா்கள் நோட்டமிட்டதாக புகாா் எழுந்துள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெருமாள்புரம் அருகே அன்புநகா் பகுதியில் உள்ள நயினாா் நாகேந்திரன் வீட்டின் அருகே மோட்டாா் சைக்கிளில் இரு நபா்கள் புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமாக நோட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான சிசிடிவி புகைப்படங்களும், அவரது இல்லத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவலும் சமூக வலைதளங்களில் பரவின. இதைத் தொடா்ந்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், திருநெல்வேலி மாநகர காவல் துறையினா் கூறுகையில், பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் இல்லத்திற்கு எவ்வித மிரட்டலோ, வேறு எந்த விதமான புகாா்களோ வரவில்லை. மேற்கண்டவாறு வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.