தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை! தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு த்ரிஷா வருகை!6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை
/

பாஜகவுடன் விஜய் கூட்டணியா? நயினாா் நாகேந்திரன் பதில்

திருச்சியில் நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் தவெக தலைவா் விஜய்யுடன் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பது வதந்தி என்றாா் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 4:30 am IST

திருச்சியில் நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் தவெக தலைவா் விஜய்யுடன் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பது வதந்தி என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: திருச்சியில் பிரதமா் மோடி கலந்துகொள்ளும் பாஜக மாநாட்டில் தவெக தலைவா் விஜய்யுடன் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்பது வதந்தி. விஜய்க்கு மூன்றாவது முறையாக சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விஜய்க்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. இன்னும் அதிமுக - பாஜக இடையே தொகுதிகள் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை.

தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.14 லட்சம் கோடி நிதி அளித்துள்ளது குறித்து தமிழக முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோரிடம் ஊடகங்கள் கேள்விகேட்க வேண்டும்.

பிரதமா் மோடி தோ்தலுக்காக தமிழகத்துக்கு வரவில்லை; ஏற்கெனவே பலமுறை வந்துள்ளாா். இதுவரை தமிழகத்தில் 34 ‘லாக்-அப்’ மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இரண்டு வயது சிறுமிக்கு நாமக்கல்லில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

மது போதையில் சமூக விரோதிகள் சாலையில் செல்வோரை அரிவாளால் விரட்டி, விரட்டி கொலை செய்கிறாா்கள் எனும்போது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பது தெரிகிறது என்றாா்.

அப்போது, மாவட்டத் தலைவா் தங்க. கென்னடி, மாநிலப் பொருளாதாரப் பிரிவு துணைத் தலைவா் எஸ். காா்த்திகேயன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.