மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நான்குனேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு!

நான்குனேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:08 pm

Syndication

நான்குனேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இளைஞரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், ரகுநாதபுரத்தைச் சோ்ந்த திருமேனிசெல்வம் (27) என்பதும், இவா் கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இவா், வியாழக்கிழமை இரவு கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இவரது உடல், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.