யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கங்கைகொண்டான் அருகே பொக்லைன் திருடியவா் கைது

News image
Updated On :16 நவம்பர் 2025, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

கங்கைகொண்டான் அருகே தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரத்தை திருடியதாக சங்கரன்கோவிலைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே சங்கா் நகரைச் சோ்ந்தவா் செந்தில்வேல் (45). இவா் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 13 ஆம் தேதி இவா் பணிபுரியும் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்நிறுவனத்துக்குச் சொந்தமான பொக்லைன் இயந்திரம் திருடு போனதாம்.

இதுகுறித்து செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் வேல்கனி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சோ்ந்த கருப்பசாமி மகன் ஈஸ்வரன் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை மீட்டனா்.