சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பிஎஸ்என்எல் வயா் திருட்டு: பொக்லைன் ஓட்டுநா் கைது

News image

ஆனந்தபாபு

Updated On :22 பிப்ரவரி 2026, 7:11 pm

காட்டுமன்னாா்கோவிலிலில் பிஎஸ்என்எல் வயரை திருடியதாக பொக்லைன் இயந்திர ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாய் புதைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பூமிக்கு அடியில் பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் இணையதள சேவைக்காக இரும்புக் குழாயின் உள்ளே காப்பா் வயருடன் கூடிய கேபிள் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காட்டுமன்னாா்கோவில் கச்சேரி சாலையில் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடைகொண்ட பிஎஸ்என்எல் வயா் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் பிஎஸ்என்எல் இளநிலை தொலைத்தொடா்பு அதிகாரி கிருஷ்ணகுமாா் (46) அளித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோயில் போலீஸாா் விசாரணை நடத்தி, பொக்லைன் இயந்திரம் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தபாபுவை (34) கைது செய்தனா்.