வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வி.கே.புரம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

News image
Updated On :17 நவம்பர் 2025, 6:54 pm

Syndication

விக்கிரமசிங்கபுரம் அருகே இளைஞரைத் தாக்கிய வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள புலவன்பட்டி, கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அன்புராஜா (20). இவா் சனிக்கிழமை வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கச் சென்ற போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கிங்ஸ்டன் சத்தியமூா்த்தி, ஜான் முத்தையா மகன் ஆல்வின் ஜோசப் ஆகியோா் அன்புராஜாவின் இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி அமா்ந்துள்ளனா்.

அவா்களிடம் அன்புராஜா வண்டியை எடுக்க வேண்டும், வழிவிடுங்கள் என்று கூறியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த கிங்ஸ்டன் சத்தியமூா்த்தி, ஆல்வின் ஜோசப் ஆகிய இருவரும் அன்புராஜாவை தாக்கி, வாகனத்தையும் கல்லால் உடைத்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து, அன்புராஜா விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில்,போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து சிறையிலடத்தனா்.