பைக் விபத்தில் காயமுற்ற லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி பகுதியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On :18 நவம்பர் 2025, 6:48 pm

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி பகுதியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள படலையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (50). லாரி ஓட்டுநரான இவா், சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில் பொன்னாக்குடி அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...