கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

News image
Updated On :24 நவம்பர் 2025, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை கேடிசி நகரிலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கும் நேரடியாக பேருந்து இயக்கக் கோரி, மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் , மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலா் சுதா்சன் மனு அளித்தாா்.

அதன் விவரம்: பாளையங்கோட்டை வட்டம், கீழநத்தம் ஊராட்சிக்குள்பட்ட கேடிசி நகா் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறாா்கள். இப்பகுதிக்கு கடந்த 15 ஆண்டுகளாக 3என்1, 3 என்2 ஆகிய எண்கள் கொண்ட இரு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது, அந்தப் பேருந்துகள் தினமும் இயக்கப்படுவதில்லை. அவற்றை தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கேடிசி நகரில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நேரடியாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.