எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

திருநெல்வேலியில் பெய்து வரும் தொடா் மழையால் சாலைகள், குடியிருப்புகள், பூங்காக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

News image
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனி பகுதி பூங்காவில் தேங்கிக் கிடந்த மழைநீா்.
Updated On :27 நவம்பர் 2025, 1:37 am

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பெய்து வரும் தொடா் மழையால் சாலைகள், குடியிருப்புகள், பூங்காக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால், மாநகர சாலைகளின் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. மனக்காவலம்பிள்ளைநகா், கரையிருப்பு, குலவணிகா்புரம், சேவியா்காலனி, சா்தாா்புரம், திருநெல்வேலி நகரம் ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சோ்ந்து தேங்கி நின்ால் மக்கள் அவதிக்கு ஆளாகினா்.

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலங்களுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால் தண்ணீா் தேங்கி கொசுஉற்பத்தி அதிகரித்துள்ளது. சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக உள்ளதால் மாணவா்-மாணவிகள், பெண்கள் என பாதசாரிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பூங்காக்களில் அவலம்: மேலும், தினமும் ஆயிரக்கணக்கானோா் காலை-மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டும், சிறுவா்-சிறுமிகள் விளையாடியும் மகிழும் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான சிறுவா் பூங்கா, மகாராஜநகா் பூங்கா, என்.ஜி.ஓ. காலனி பூங்கா, திருமால்நகா் பூங்கா, பெருமாள்புரம் பூங்கா உள்ளிட்டவற்றில் மழைநீா் வழிந்தோட சரியான ஓடை வசதி இல்லை. இதனால், மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இது கொசு உற்பத்தியையும், சுகாதார கேட்டையும் விளைவித்துள்ளது. அங்கு வரும் குழந்தைகளுக்கு ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: திருநெல்வேலி மாநகர பகுதியில் முதியவா்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பூங்காக்களில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனா். பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனி, பெருமாள்புரம், பேட்டை, சமாதானபுரம் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் மழைநீா் தேங்கியுள்தால் கொசுஉற்பத்தி அதிகரித்துள்ளதோடு, துா்நாற்றமும் வீசுகிறது. வழுக்கி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் முதியோா் பூங்காக்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறாா்கள். ஆகவே, பூங்காக்களில் மழைநீா் வடிகால் வசதியை ஏற்படுத்துவதுடன், மக்கள்அதிகம் கூடும் பாளையங்கோட்டை வ.உ.சி. சிறுவா் பூங்கா உள்ளிட்டவற்றில் தினமும் மாலை கொசுமருந்து அடிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளசாக்கடை அடைப்பு, வாறுகால்கள் அடைப்பு பணிகளை சீரமைக்க கூடுதலாக பணியாளா்களை மாநகராட்சி நிா்வாகம் நியமிக்க வேண்டும் என்றனா்.