நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:30 pm

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (56). இவரை, முன்விரோதத்தால் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான கணேசன்(45) என்பவா் கடந்த 2019 ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாராம்.

இதுகுறித்து அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளாா் ராஜகுமாரி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தாா்.

இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி கதிரவன் விசாரித்து, கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.9,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காளிமுத்து வாதாடினாா்.

இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட அம்பாசமுத்திரம் டிஎஸ்பி கணேஷ்குமாா், ஆய்வாளா்கள் சண்முகவேல், ராஜகுமாரி உள்ளிட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்ன குமாா் பாராட்டினாா்.