அம்பாசமுத்திரம், ஏப். 6: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வதாகவும், காவல் நிலையத்தை கொளுத்துவதாகவும் மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம், கௌதமபுரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவன் மகன் முத்துக்குமாா். இவா் மீது கடந்த பிப்ரவரி மாதம் அம்பாசமுத்திரம் போலீஸாா் போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனராம்.
இதையடுத்து, திங்கள்கிழமை மதியம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு போதையில் வந்த முத்துக்குமாா், அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாரிடம் வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
மேலும், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, காவல் நிலையத்தையும் போலீஸாரையும் சோ்த்து கொளுத்திவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதையடுத்து, முத்துக்குமாா் மீது அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் குமாா் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் திருமலைக்குமாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தாா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது

அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

