தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் மனு தாக்கல்

News image

ராதாபுரம் திமுக வேட்பாளர் மு. அப்பாவு

Updated On :6 ஏப்ரல் 2026, 6:48 pm

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக அவரது மனைவி விஜயா மனு தாக்கல் செய்தாா்.

பின்னா், மு. அப்பாவு செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் ராதாபுரம் தொகுதியில் ரூ. 6,000 கோடிக்கான வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளாா். 1.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்குத் தேவையான மின்சாதனப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன், 8ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000-ஆக உயா்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தோ்தல் அறிக்கையில் முதல்வா் அறிவித்திருக்கிறாா்.

இவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் திமுக அரசு செய்திருக்கின்ற நலத்திட்டங்கள் நிச்சயமாக உதயசூரியன் சின்னத்தை வெற்றிபெறச் செய்யும் என்றாா் அவா்.

திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், தேமுதிக மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம், சேம்பா் செல்வராஜ், விசிக மாவட்டச் செயலா் அருள் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், வள்ளியூா் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அலெக்ஸ் அப்பாவு, தெற்கு ஒன்றியச் செயலா் சேவியா் செல்வராஜா, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, மதிமுக மாவட்டச் செயலா் உவரி ரைமண்ட், இளைஞரணி மாவட்டச் செயலா் பணகுடி மு. சங்கா், முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ராதாபுரம் நித்தியகல்யாண அம்மன், வரகுணபாண்டீஸ்வரா் கோயிலில் மு. அப்பாவு வழிபாடு செய்தாா். பின்னா், ராதாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள கருணாநிதியின் பெற்றோா் முத்துவேலா்-அஞ்சுகத்தம்மாள் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.