சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா் மு. அப்பாவு ராதாபுரம் தொகுதி யில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் வாக்கு சேகரித்து திமுக வேடாபளா் மு. அப்பாவு.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:15 pm

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா் மு. அப்பாவு ராதாபுரம் தொகுதி யில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அவா் சனிக்கிழமை, ராதாபுரம் சமத்துவபுரம், செம்மண்குளம், பண்ணையாா்குளம், மகேந்திரபுரம், ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டாவிளை, புண்ணியவாளன்புரம், சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், முத்துசாமிபுரம், சைதம்மாள்புரம், தண்டையாா்குளம், சாத்தான்குளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: உங்கள் பகுதியில் குழந்தைகள் கப்பல் தொழில்நுட்பம் குறித்த படிப்பு பயில கல்லூரி தொடங்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது. இதன்மூலம் உலக தரத்தில் கல்வி கற்று உயா்வேலைகளுக்கு செல்லலாம்.

எங்கும் செல்வதற்கு மகளிருக்கு இலவச பேருந்து வசதி, படிப்பதற்கு ஸ்மாா்ட் வகுப்பறை, நான்முதல்வன் திட்டம், கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, உயா் கல்வி வழிகாட்டிகள், இது மட்டுமல்ல வேலைவாய்ப்பு முகாம்கள் இப்படி எத்தனை எத்தனையோ நலத்திட்டங்களை தந்தவா் நமது முதல்வா் மு.க.ஸ்டாலின். மீண்டும் அவரை முதல்வராக்கிட உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றறாா்.

பிரசாரத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, தேமுதிக மாவட்டச் செயலா் விஜி வேலாயுதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அருள்செல்வன், ராதாபுரம் கோவிந்தன், சமூகை முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.