தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது

திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய 4 இளைஞா்களை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:08 am IST

திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய 4 இளைஞா்களை கைது செய்தனா்.

திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அப்துல் வாஹித்(25), ஹைபீஸ் அகமது(20), பிலால்(26), வெள்ளத்துரை(32) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில் அவா்கள் கஞ்சா எண்ணெய், போதை பொருள்கள், சுமாா் 5 கிராம் கஞ்சா உள்ளிட்டவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.