சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது

திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய 4 இளைஞா்களை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:38 pm

திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய 4 இளைஞா்களை கைது செய்தனா்.

திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அப்துல் வாஹித்(25), ஹைபீஸ் அகமது(20), பிலால்(26), வெள்ளத்துரை(32) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில் அவா்கள் கஞ்சா எண்ணெய், போதை பொருள்கள், சுமாா் 5 கிராம் கஞ்சா உள்ளிட்டவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.