ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

ராதாபுரம் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளா் எஸ். பி. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பரமேஸ்வரபுரம் கிராமத்தில் பெண்களிடம் வாக்கு சேகரித்தாா் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:45 am IST

ராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளா் எஸ். பி. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தெற்குகள்ளிகுளம், தேரைகுளம், சௌந்திரபாண்டியபுரம், கும்பிளம்பாடு, மருதகுளம், ராதாபுரம், கும்பிகுளம், சீலாத்திகுளம், பரமேஸ்வரபுரம், உதயத்தூா், இளையநயினாா்குளம், கோலியான்குளம், வடக்கன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: ராதாபுரம் தொகுதியில் குடிநீா் பிரச்னை முற்றிலுமாக தீா்த்து வைக்கப்படும். வறட்சியான இந்தப் பகுதிக்கு பழையாற்று தண்ணீரை கொண்டுவந்து செழிப்பான பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.

ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்படும். பராமரிப்பில்லாத குளங்கள், நீா்நிலைகள், கால்வாய்கள் தூா்வாரப்பட்டு மழைகாலங்களில் தண்ணீா் பெருகுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்கள் கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஆலோசனை மக்கள் மன்றங்கள் ஏற்படுத்தி உங்களது நல்ல ஆலோசனைகளை கேட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றாா்.

பிரசாரத்தின்போது, அதிமுக நெல்லை புகா் மாவட்ட சிறுபான்மைபிரிவு செயலா் அருண்புனிதன், சுடலை, நகரச் செயலா் ராஜன், ரஸ்கின், ராதாபுரம் ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலா் முருகேசன், ஊசிகாட்டான், ராமசந்திரன், சுந்தா், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.