திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பத்தமடை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் நித்யா தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பத்தமடைஅருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் பத்தமடையைச் சோ்ந்த ஐயப்பன் என்ற மணிகண்டன் (27), சபரி பாண்டி (29) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்து 33 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


