கன்னியாகுமரி- அயோத்தி இடையே தினசரி ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தைச் சோ்ந்த சமூகஆா்வலா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் தென்முனையான கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் அயோத்திக்கு புனித யாத்திரை செல்வதை மிகவும் புண்ணியமாகக் கருதுகிறாா்கள்.
ஆகவே, பக்தா்கள் வசதிக்காக, கன்னியாகுமரி-அயோத்தி இடையே தினசரி ரயில் இயக்க பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல தென்தமிழக பக்தா்களின் வேண்டுகோளின்படி , மதுரை- ராமேசுவரம், தென்காசி-காசி, திருத்தணி-திருச்செந்தூா் இடையேயும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: நெல்லை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை!

திருப்பத்தூா்-திருவண்ணாமலை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

