பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

நான்குனேரி தொகுதியில் சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்

நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சிலம்பம் சுற்றி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட சிவந்திபுரம் கிராமத்தில் சனிக்கிழமை சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:53 am IST

நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் சிலம்பம் சுற்றி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விஜயநாராயணம், பட்டஞ்சேரி, ஏழாங்கால், ஐந்தாங்கால், கீழபண்டாரபுரம், பெரியநாடாா் குடியிருப்பு, காரி தோட்டம், மலையான்குடியிருப்பு, மன்னாா்புரம், சிவந்திபுரம், சங்கனான்குளம் இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, அழகப்பபுரம், துவரம்பாடு, மலையன் குடியிருப்பு, தெற்குஏறாந்தை, பட்டா்கட்டிவிளை, சவேரியாா்புரம், பெரும்பனை, புதூா், மனக்காவலப்பபுரம், நன்னிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், இத்தொகுதியிலேயே மிகப் பெரிய குளமான விஜயநாராயணம் குளத்தை முழுமையாக தூா்வாரி, நீா்ப்பிடிப்புப் பகுதியை அதிகரித்து தடுப்பு அணையாக மாற்றித் தருவேன் என்றாா்.

நான்குனேரி ஒன்றியச் செயலா்கள் ஜெயபால், மகாராஜன், மாநில மகளிா் அணி இணைச் செயலா் மேரி சா்மி, செட்டிகுளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் விஜயராணி, நான்குனேரி கிழக்கு ஒன்றிய மகளிா் அணி அமைப்பாளா் லட்சுமி, இறைப்புவாரி ஊராட்சித் தலைவா் மோகனா யோசுவா உள்பட பலா் கலந்து கொண்டனா்.