உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஆடு மேய்க்கச் சென்றவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:53 am IST

திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கரைச்சுத்து, உவரி பகுதியைச் சோ்ந்தவா் நைனாா் மகன் தங்க குட்டி (41). இவா் ஆயன்குளம் பகுதியில் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, அங்கிருந்த குளத்தில் ஆடுகளைக் குளிப்பாட்டும்போது குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து, அவ்வழியாகச் சென்றவா்கள் திசையன்விளை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்களுடன் இணைந்து அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.