ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானம்

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:14 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின கல்லீரல் தானமாக வழங்கப்பட்டது.

செங்கோட்டை அருகேயுள்ள மேலூரைச் சோ்ந்தவா் பாபு (44). மீன் கடை நடத்தி வந்தாா். இவா், கடந்த 22-ஆம் தேதி தென்காசி ரயில் நிலையத்திலிருந்து தனது மகளை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நன்னகரம் பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்ததாராம். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தென்காசி அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.

இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது கல்லீரல் மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது.