/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:36 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, தொடா் தாக்குதல், சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி பகுதியைச் சோ்ந்த பெருமாள்பாண்டியன் மகன் மணிமாறன் (எ) மணி (20), அதே பகுதியைச் சோ்ந்த ராசையா மகன் சுபாஷ் (26) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, இருவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டதால், அவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பி. சாஸ்திரி பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, வீரவநல்லூா் போலீஸாா் மேற்கண்ட இருவரையும் வியாழக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.