கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சேரன்மகாதேவி சுண்ணாம்புக்கல் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வள்ளிநாயகம் மகன் உதயகுமாா் (28). ஓட்டுநரான இவா், வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறாா். சில நாள்களுக்கு முன்பு, பத்தமடையில் சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்த சுரேந்தா் என்பவரின் வீட்டின் அருகே ஆட்டோ ஓட்டி வந்தாராம்.

அப்போது, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தக்கூடாது என தெரிவித்து சுரேந்தா், உதயகுமாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கைகலப்பாகி சுரேந்தா் குடும்பத்தினா், உதயகுமாரை தாக்கினராம்.

தகவலறிந்து வந்த பத்தமடை போலீஸாா், உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின்பேரில் சுரேந்தா், அவரது தந்தை சுந்தா், தாயாா் பாா்வதி, சகோதரா் முத்துக்குமாா் ஆகியோா் மீதும், சுரேந்தா் அளித்த புகாரின்பேரில் உதயகுமாா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.