முன்விரோதத் தகராறு: 2 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

போலீஸ் - கோப்புப்படம்.
வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனியாா் வங்கி ஊழியா் டில்லிபாபு(32). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பழனிசாமி(42). இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம்.
கடந்த சனிக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து டில்லிபாபு புகாரின் பேரில் பழனிசாமி மீதும், பழனிசாமி புகாரின் பேரில் டில்லிபாபு மீதும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





