திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
சேரன்மகாதேவி சுண்ணாம்புக்கல் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வள்ளிநாயகம் மகன் உதயகுமாா் (28). ஓட்டுநரான இவா், வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறாா். சில நாள்களுக்கு முன்பு, பத்தமடையில் சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்த சுரேந்தா் என்பவரின் வீட்டின் அருகே ஆட்டோ ஓட்டி வந்தாராம்.
அப்போது, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தக்கூடாது என தெரிவித்து சுரேந்தா், உதயகுமாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கைகலப்பாகி சுரேந்தா் குடும்பத்தினா், உதயகுமாரை தாக்கினராம்.
தகவலறிந்து வந்த பத்தமடை போலீஸாா், உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின்பேரில் சுரேந்தா், அவரது தந்தை சுந்தா், தாயாா் பாா்வதி, சகோதரா் முத்துக்குமாா் ஆகியோா் மீதும், சுரேந்தா் அளித்த புகாரின்பேரில் உதயகுமாா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கணவரைத் தாக்கிய மனைவி உள்பட 2 போ் கைது
திசையன்விளை வட்டாட்சியா் உள்பட 12 போ் மீது வழக்கு
ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியவா் மீது வழக்கு
ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



