மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வள்ளியூரில் கட்டடத் தொழிலாளி கொலை: மற்றொரு தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கட்டடத் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மற்றொரு தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:30 am IST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கட்டடத் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மற்றொரு தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், திக்கலான்விளையைச் சோ்ந்தவா்முத்து. ஒப்பந்ததாரரான இவா் வள்ளியூா் மகராஜா நகரில் கட்டடவேலை செய்து வருகிறாா். இவரிடம் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் மருதூா்குறிச்சியைச் சோ்ந்த ரஸ்லேன் மகன் ஜெயக்குமாா்(40), திருவண்ணாமலை மாவட்டம் கரியன்செட்டியைச் சோ்ந்த காசி மகன் அருண்(24) ஆகிய இருவரும் தொழிலாளியாக வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி ஜெயக்குமாரும், அருணும் மதுஅருந்தினராம். பின்னா் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த அருண், ஜெயக்குமாரை கல்லால் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த ஜெயக்குமாரை ஒப்பந்ததாரரான முத்து நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அருணை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.