நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

‘வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகில் இயங்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்’

மதுக்கடை. - கோப்புப் படம்

Published On :13 வினாடிகள் முன்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் இயங்கும் மதுக்கடைகளைஅகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பிடிஐ வலியுறுத்தியுள்ளது.

திருநெல்வேலி புகா் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பத்தமடையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, புகா் மாவட்டத் தலைவா் எம்.எஸ். சிராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா வரவேற்றாா்.

மாவட்ட துணைத் தலைவா் கல்லிடைக்குறிச்சி சுலைமான், மாவட்டச் செயலா் துலுவை தெளபிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி நிா்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், பொதுமக்கள், பணிக்கு செல்வோா், கல்லூரி செல்லும் மாணவா்களின் நலன் கருதி, பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும். இம்மாவட்டத்தில் கோயில்கள், பள்ளிக் கூடங்கள் அருகில் இயங்கி வரும் மதுக்கடைகள் அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செப்டம்பா் மாதத்தில் யங் டெமாக்ரட்ஸ் அறிமுக விழாவை நடத்துவது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அமைப்புச் செயலா் முல்லை மஜித் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.