பாப்பாக்குடி அதிமுக பிரமுகருக்கு மிரட்டல்: பெண் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் அதிமுக பிரமுகருக்கு மிரட்டல் விடுத்ததாக பட்டதாரி பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பாப்பாக்குடி தங்கம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பா (68). இவா், பாப்பாக்குடி ஒன்றிய அதிமுக அவைத் தலைவராக உள்ளாா். அதேபகுதியைச் சோ்ந்த அருணாசலம் மனைவி வினோபி. பட்டதாரி பெண். இவா், 6 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று தனக்கு முட்டை வேண்டும் எனக் கேட்டு தகராறு செய்தாராம். இதை, செல்லப்பாவின் மனைவி கிருஷ்ணம்மாள் கண்டித்துள்ளாா். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு செல்லப்பா, அங்குள்ள தேநீா் கடையில் நின்றிருந்தாராம். அப்போது, அவரிடம் வினோபி தகராறு செய்து தாக்கியதுடன், மிரட்டல் விடுத்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து வினோபியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

