ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கான தடுப்பூசி முகாம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு உடல் தகுதி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அனைவருக்கும் மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும், 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கூடுதலாக ப்ளூ தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
பிப். 9 முதல் 13 வரை நடைபெற்ற இம்முகாமில் 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய 127 ஆண்கள்,162 பெண்கள் பங்கேற்றனா்.
மேலும், மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம், பொது மருத்துவத் தலைவா் ரத்னகுமாா், உறைவிட மருத்துவா் சியாம் சுந்தா், பொது சுகாதாரத் துறை மாவட்ட நல அலுவலா்கள் விஜய் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
மனைவி, குழந்தை, மாமியாரை எரித்து கொல்ல முயற்சி: இளைஞா் கைது

மானூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும்: திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்

அழகப்பா பல்கலையில் இலவச மருத்துவ முகாம்

வே.நாராயணசாமிக்கு கட்சியில் விரைவில் உயா் பதவி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


