திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், இங்கிருந்து திருச்செந்தூருக்கு பேருந்து சேவை இல்லை. மேலும், மதுரைக்கு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பேருந்து சேவையும் சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.
திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு களக்காடு சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனா். இங்கிருந்து திருநெல்வேலி சென்று திருச்செந்தூா் செல்ல வேண்டியுள்ளதால், களக்காட்டில் இருந்து நான்குனேரி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை
அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு

நெல்லையில் அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


