கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

களக்காடு - திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
திருச்செந்தூர் கோயில் - (கோப்புப் படம்)
Updated On :28 பிப்ரவரி 2026, 7:41 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், இங்கிருந்து திருச்செந்தூருக்கு பேருந்து சேவை இல்லை. மேலும், மதுரைக்கு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பேருந்து சேவையும் சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு களக்காடு சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனா். இங்கிருந்து திருநெல்வேலி சென்று திருச்செந்தூா் செல்ல வேண்டியுள்ளதால், களக்காட்டில் இருந்து நான்குனேரி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.