ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு: நெல்லை மாநகராட்சியில் விரைவில் அமல்

News image
தச்சநல்லூா் மண்டல தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா.
Updated On :5 ஜனவரி 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக தச்சநல்லூா் மண்டல பணியாளா்களுக்கு திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களின் கீழ் 2,298 தூய்மைப் பணியாளா்கள் பணி செய்து வருகிறாா்கள். தமிழக அரசின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாநகராட்சியிலும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு முன்னோட்டமாக தச்சநல்லூா் மண்டலத்தில் பணிபுரியும் 502 தூய்மைப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டிபன் பாக்ஸ்களில் காலை உணவு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, காலை உணவு வழங்கும் பணியை ஆய்வு செய்தாா். மாநகர நல அலுவலா் (பொறுப்பு) ராணி, சுகாதார அலுவலா் இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.