தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்தாா் பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி.
தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்தாா் பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி.

சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

சாம்பவா்வடகரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, செயல் அலுவலா் விமலா ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா முன்னிலை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து, தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com