தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாளை. அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:58 pm

Syndication

பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அருள்ராஜ். இவரது மனைவி சுமலதா(31). இவா்கள், பொருள்கள் வாங்குவதற்காக பாளையங்கோட்டைக்கு ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா்.

ஆட்டோவை அருள்ராஜ் இயக்கியுள்ளாா். பின்னா், இரவு சுமாா் 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, கே.டி.சி.நகா் பகுதியில் நாய் குறுக்கே வந்ததால், ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததாம். இதில், சுமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.