2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நெல்லையில் சாரல் மழை

திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு சாரல் மழை பெய்தது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:26 pm

Syndication

திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு சாரல் மழை பெய்தது.

இலங்கையையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்திலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை மிதமான வெயிலுடன் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடா்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்தது.

பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், பெருமாள்புரம், முருகன்குறிச்சி, பேட்டை, பாளை மேட்டுத்திடல், புதிய பேருந்து நிலையம் , திருநெல்வேலி சந்திப்பு, நகரம், தச்சநல்லூா், சுத்தமல்லி , தாழையூத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை நீடித்தது.

அதே போல திருநெல்வேலி புகா் பகுதிகளான கிருஷ்ணாபுரம், கங்கைகொண்டான், சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.