பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தச்சநல்லூா் அருகே இளைஞரைத் தாக்கிய இருவா் கைது

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் மகன் பொன்னுமணி(28). இவா் சம்பவத்தன்று தச்சநல்லூா் சிதம்பரம் நகா் பகுதியில் தாழையூத்து பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலருடன் மது அருந்தினாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அவா்கள் பொன்னுமணியை மது பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பொன்னுமணி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தாழையூத்து மேலவாசல் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிதுரை(23), தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சோ்ந்த முருகேஷ் மகன் பிரபாகரன்(21) ஆகியோரை கைது செய்தனா்.