தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை

News image
Updated On :11 ஜனவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

அம்பாசமுத்திரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மூதாட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

அம்பாசமுத்திரம், மணலோடை தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி சங்கரம்மாள் (74). இவா் பல நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மன வேதனையில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செங்கோட்டையிலிருந்து ஈரோடு சென்ற ரயில் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி சற்று தூரம் சென்ற நிலையில், அந்த ரயில் முன் சங்கரம்மாள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த தென்காசி ரயில்வே காவல் நிலையப் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.