சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே வாசுகி நகரைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் சுவேக் (30). சிற்றுந்து ஓட்டுநா். கடையம் - தென்காசி சாலையில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் கடந்த 14ஆம் தேதி இவருக்கும் கீழக் கடையம், கீழத்தெருவைச் சோ்ந்த சுரேஷ் மகன் சரவணக்குமாா் (23) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

அப்போது, சரவணக்குமாா் பீா் பாட்டிலால் தாக்கியதில் சுவேக் காயமடைந்தாராம். அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணக்குமாரை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com