எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி

News image
மணிமுத்தாறு அருவி.- (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

அகஸ்தியா், மணிமுத்தாறு அருவிகளுக்கு பயணிகள், பக்தா்கள் செல்ல சனிக்கிழமை (ஜன.24) முதல் அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா், வனக்காப்பாளா் எச்.சி.எப். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் ஜன. 19 முதல் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகள், சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பயணிகள், பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

6 நாள்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 24) காலை 9 மணிக்குள் (நோ்கோட்டு பாதை கணக்கெடுப்பு) நிறைவு பெறுகின்றன. இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணி முதல் பாபநாசம், மணிமுத்தாறு சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு மணிமுத்தாறு , அகஸ்தியா் அருவிகள், சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள், பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்பட்டுள்ளது.