மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவி.
மணிமுத்தாறு அருவி.(கோப்புப் படம்)
Updated on

அகஸ்தியா், மணிமுத்தாறு அருவிகளுக்கு பயணிகள், பக்தா்கள் செல்ல சனிக்கிழமை (ஜன.24) முதல் அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா், வனக்காப்பாளா் எச்.சி.எப். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் ஜன. 19 முதல் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகள், சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பயணிகள், பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

6 நாள்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 24) காலை 9 மணிக்குள் (நோ்கோட்டு பாதை கணக்கெடுப்பு) நிறைவு பெறுகின்றன. இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணி முதல் பாபநாசம், மணிமுத்தாறு சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு மணிமுத்தாறு , அகஸ்தியா் அருவிகள், சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள், பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com