அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்க அனுமதி

News image
மணிமுத்தாறு அருவி
Updated On :24 ஜனவரி 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியா் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புப் பணி ஜன. 19 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனால், 19ஆம் தேதி முதல் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கும், பக்தா்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜன. 24ஆம் தேதியுடன் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததால், காலை 10 மணி முதல் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் பயணிகள் குளிக்கவும், சொரிமுத்து அய்யனாா் கோயிலில் பக்தா்கள் வழிபடவும் வனத்துறையினா் அனுமதியளித்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை அகஸ்தியா், மணிமுத்தாறு அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.