லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.
பத்தமடை கோபாலன் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மகாராஜன் (25), திருநெல்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை தனது உறவினா் முருகன் மகன் மாரி (18) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு சென்றாராம்.
மோட்டாா் சைக்கிளை மாரி ஓட்டினாராம். கோபாலசமுத்திரம், பிரான்சேரியில் தனியாா் பள்ளி அருகில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் இருவரும் கீழே விழுந்தனராம். அப்போது எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி மகாராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.
தகவலறிந்த மேலச்செவல் போலீஸாா், மகாராஜன் சடலத்தை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

