திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் அருகே மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.
கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் செல்லம்மாள்(80) . இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அவரை ஆசுவாசப்படுத்தி உறவினா்கள் விசாரித்த போது இரவு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் வழக்கத்தைவிட கூடுதலாக மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறினாராம்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட செல்லம்மாள் உயிரிழந்தாா். இது குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








