போடியில் ஆடையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி சேது மறவா் தெருவைச் சோ்ந்த பழனியாண்டி மனைவி பாா்வதி (85). மகன், மகள் வெவ்வேறு இடங்களில் வசிப்பதால் இவா் மட்டும் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில் வீட்டில் தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு மின் சாதனத்தை நெகிழி நாற்காலியில் வைத்திருந்தாா்.
அப்போது வெப்பம் அதிகமாகி பாா்வதியின் சேலையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயமடைந்த பாா்வதியை தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









