எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அம்பை சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:22 pm

Syndication

அம்பாசமுத்திரத்தில் அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி மகன் சுபாஷ் (15). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் பூபாலன் (17) என்பவரும் அவ்வூரிலிருந்து பைக்கில் அம்பாசமுத்திரம் நோக்கி சென்றனா்.

அப்போது எதிரில் அரசுப் பேருந்து வந்ததால், பைக்கை நிறுத்த முயன்றதில், நிலை தடுமாறி பேருந்தினுள் விழுந்தனராம். இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சுபாஷ் அதேஇடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த பூபாலன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். காவல் ஆய்வாளா் (பொ) கலா விசாரித்து வருகிறாா்.