கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான பங்களாக்குடியிருப்பில் உள்ள தனியாா் தோட்டத்தில் காட்டு யானை புகுந்து தென்னை மரத்தைச் சாய்த்ததில் அருகிலிருந்த மின்கம்பமும் முறிந்து விழுந்தது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரக மலையடிவார கிராமமான பங்களாக்குடியிருப்பில் தாமஸ் என்பவரது தென்னந்தோப்பில் புதன்கிழமை இரவு நுழைந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த தென்னை மரத்தை மோதிச் சாய்த்ததில் அருகிலிருந்த மின் கம்பி மீது மரம் விழுந்து. இதில் மின்கம்பம் அடியோடு முறிந்தது. இதையடுத்து, யானை திரும்பிச் சென்றுள்ளது.
கருத்தப்பிள்ளையூா், பங்களாக்குடியிருப்பு, பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானையின் அட்டகாசம் சுமாா் 6 மாதங்களுக்கும் மேல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும் இழப்பு ஏற்பட்டு மீளமுடியாத நிலையில் இருப்பதாகவும் கவலை தெரிவித்தனா். மேலும், யானைகளை கட்டுப்படுத்த கடையம் வனச்சரகப் பகுதியில் விடுபட்டுள்ள பகுதியில் சூரிய மின்வேலிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


