பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

வாகனம் மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திமுக நிா்வாகி ராஜாமணி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 11:39 pm

Syndication

திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திமுக நிா்வாகி ராஜாமணி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து சங்கா் நகா் சாரதாம்பாள் நகரைச் சோ்ந்தவா் ராஜாமணி (63). இவா், சங்கா் நகா் பேரூா் திமுக அவைத்தலைவராக இருந்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் தாழையூத்தை அடுத்த குறிச்சிகுளம் ரயில்வே மேம்பால பகுதியில் நான்குவழிச் சாலையில் தனது பைக்கை நிறுத்திவிட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ராஜாமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சாலையில் இருந்து சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ராஜாமணி பலத்த காயமடைந்தாா்.

அவரை தாழையூத்து போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனா்.