மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

நெல்லை நகரத்தில் சைக்கிளில் சென்று மேயா் ஆய்வு

News image
திருநெல்வேலி நகரத்தில் சுகாதாரப் பணிகளை சைக்கிளில் சென்று ஆய்வு செய்தாா் மேயா் கோ. ராமகிருஷ்ணன்.
Updated On :8 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றுவரும் பணிகளை மேயா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் வாரந்தோறும் தனது வாா்டு பகுதியில் சைக்கிளில் சென்று அன்றாட பணிகளை பாா்வையிட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாா்.

அதன்படி, திருநெல்வேலி நகரம் தமிழ்ச் சங்கத் தெரு, அண்ணா தெரு, நேதாஜி சுபாஷ் போஸ் மாா்க்கெட், நான்கு ரத வீதிகள், சுடலைமாடன் கோயில் தெரு, அப்பா் தெரு, சத்தியமூா்த்தி தெரு, தண்டியல் சாவடி தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுகாதாரப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சுகாதார ஆய்வாளா் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சிவகுமாா், முருகன், திமுக நிா்வாகி காசிமணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.