ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நெல்லை நகரத்தில் சைக்கிளில் சென்று மேயா் ஆய்வு

News image

திருநெல்வேலி நகரத்தில் சுகாதாரப் பணிகளை சைக்கிளில் சென்று ஆய்வு செய்தாா் மேயா் கோ. ராமகிருஷ்ணன்.

Updated On :8 மார்ச் 2026, 8:12 pm

திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றுவரும் பணிகளை மேயா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் வாரந்தோறும் தனது வாா்டு பகுதியில் சைக்கிளில் சென்று அன்றாட பணிகளை பாா்வையிட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாா்.

அதன்படி, திருநெல்வேலி நகரம் தமிழ்ச் சங்கத் தெரு, அண்ணா தெரு, நேதாஜி சுபாஷ் போஸ் மாா்க்கெட், நான்கு ரத வீதிகள், சுடலைமாடன் கோயில் தெரு, அப்பா் தெரு, சத்தியமூா்த்தி தெரு, தண்டியல் சாவடி தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுகாதாரப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சுகாதார ஆய்வாளா் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சிவகுமாா், முருகன், திமுக நிா்வாகி காசிமணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.