மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பாளை.யில் மரக்கடையில் தீ விபத்து

News image

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மரக்கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

Updated On :8 மார்ச் 2026, 7:36 pm

பாளையங்கோட்டையில் உள்ள மரக்கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் தீயில் எரிந்து சேதமாகின.

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான மரக்கடை மற்றும் கிட்டங்கி அருகருகே உள்ளது.

இங்கு தேக்கு, கோங்கு, வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளூா் மற்றும் இறக்குமதி மரத்தடிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மரத்தடிகள் எரிந்தன.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களில் சுமாா் 20 தீயணைப்பு வீரா்கள் சம்பவ இ டத்துக்கு வந்தனா். சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரத்தடிகள் தீயில் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.